Description:
HONEY WITH MIXED DRY FRUITS
அன்பான வாடிக்கையாளர்களே! தேன் சிறந்த உணவு மட்டுமின்றி உயர்ந்த மருந்து, தேனுடன் பேரீச்சம்பழம், சுட்ட முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, கறுப்பு உலர் திராட்சை, அத்திப்பழம் ஆகியவையான கூட்டு கலவையே
Honey with Mixed Dry Fruits என்ற
7-in-1 என்ற ஜாம் அறிமுகம் செய்கிறோம்.
தேன் :
உடலுக்கு உஷ்ணத்துடன் சக்தியும் தருகிறது. இரத்த சுத்திகரிப்புக்கு வல்லது. இது கெடாததும் எதையும் கெடுக்காததுமாகும்.
பேரீச்சம்பழம் :
இரும்பு சத்து அதிகம் நோய் எதிர்ப்பு சக்திக்குரியது. பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் ஏற்படும் குறைபாடுகள் தோன்றுவதை தடுக்கும். ஆண்களுக்கு ஆண்மைத்தன்மை அதிகரிக்க வல்லதுமாகும்.
சுட்ட முந்திரிப்பருப்பு :
எல்.டி.எல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதுடன் நல்ல கொலஸ்ட்ராலான எச்.டி.எல்.ஐ அதிகரிக்க வல்லது.
பாதாம் பருப்பு :
இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சுவாச கோளாறுகள், நீரிழிவு நோய், மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் சொரைஸிஸ் வராமல் பாதுகாக்கும். ஞாபக மறதி ஏற்படாமல் இருக்க வல்லது.
பிஸ்தா :
ஹிமோகுளோபின் அதிகப்படுத்தும், இருதய நோய் மற்றும் நீரழிவு நோய் ஆகியவைகளை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது.
உலர்ந்த கருப்பு திராட்சை :
குழந்தைகளின் எலும்பு உறுதியாவதுடன் பற்கள் வலுப்பெறும். இருதய துடிப்பு சீராகவும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடவும் உதவி செய்யும் தன்மை உடையது.
அத்திப்பழம் :
இரத்தம் விருத்தியாவதற்கும் சர்க்கரை நோய் கட்டுப்படவும் கருத்தரிப்பில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்குவதுடன் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் அகலவும் உதவுவதுமாகும்.
மேற்சொன்ன உலர்ந்த பழங்களுடன் சுத்தமான தேனில் உரிய முறையில் தயாரித்து, வியாதிகள் ஏற்பட காரணிகளான பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகிக்காமல் தூய்மையான கண்ணாடி பாட்டில்களில் 250 கிராம், 500 கிராம் கொள்ளளவுகளில் நிரப்பி அனைத்து சர்வோதய கதர் அங்காடிகளிலும் மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனைக்கு உள்ளது.
இந்த 7-in-1 ஜாம் 100% இயற்கையானது. இதில் நிறத்துக்கோ ருசிக்கோ கெடாமல் இருக்கவும் எந்த செயற்கையான வேதிப்பொருட்களும் கலக்காததுமாகும்.
Comments:
No comments yet.